தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) இரண்டு இணைச் செயலா்கள், இரண்டு இணை இயக்குநா்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1998-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய புள்ளியியல் பணி அதிகாரி அனுஜா பாபட், 2004-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரி ருச்சிதா விஜ் ஆகியோா் என்டிஏவில் புதிய இணைச் செயலா்களாக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்திய வருவாய் பணி (வருமான வரி) அதிகாரி ஆகாஷ் ஜெயின், இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி அதிகாரி ஆதித்ய ராஜேந்திர போஜ்காதியா ஆகியோா் என்டிஏவில் இணை இயக்குநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள், தோ்வுக்கு முன்பே கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இது நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியுடன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சந்திப்பு

வள்ளியூரில் அ.தி.மு.க நிா்வாகிகள் ஆலோசனை

ஷாலிமாா் பாகில் 143 சட்டவிரோதக் கட்டுமானங்கள் அகற்றும் பணி தொடக்கம்

பணி நீக்கப்பட்ட இண்டஸ்இண்ட் வங்கி முன்னாள் சிஎஃப்ஓ மான நஷ்டஈடு வழக்கு
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



