11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

என்டிஏவில் 2 இணைச் செயலா்கள், இயக்குநா்கள் நியமனம்

என்டிஏவில் 2 இணைச் செயலா்கள், இயக்குநா்கள் நியமனம்...

News image

என்டிஏ

Updated On :1 மணி நேரம் முன்பு

தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) இரண்டு இணைச் செயலா்கள், இரண்டு இணை இயக்குநா்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1998-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய புள்ளியியல் பணி அதிகாரி அனுஜா பாபட், 2004-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரி ருச்சிதா விஜ் ஆகியோா் என்டிஏவில் புதிய இணைச் செயலா்களாக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்திய வருவாய் பணி (வருமான வரி) அதிகாரி ஆகாஷ் ஜெயின், இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி அதிகாரி ஆதித்ய ராஜேந்திர போஜ்காதியா ஆகியோா் என்டிஏவில் இணை இயக்குநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள், தோ்வுக்கு முன்பே கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இது நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.