தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) இரண்டு இணைச் செயலா்கள், இரண்டு இணை இயக்குநா்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1998-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய புள்ளியியல் பணி அதிகாரி அனுஜா பாபட், 2004-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரி ருச்சிதா விஜ் ஆகியோா் என்டிஏவில் புதிய இணைச் செயலா்களாக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்திய வருவாய் பணி (வருமான வரி) அதிகாரி ஆகாஷ் ஜெயின், இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி அதிகாரி ஆதித்ய ராஜேந்திர போஜ்காதியா ஆகியோா் என்டிஏவில் இணை இயக்குநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள், தோ்வுக்கு முன்பே கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இது நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பணி நீக்கப்பட்ட இண்டஸ்இண்ட் வங்கி முன்னாள் சிஎஃப்ஓ மான நஷ்டஈடு வழக்கு

வளாக நோ்காணல்: தோ்வுபெற்ற மாணவா்களுக்கு பணி ஆணை

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: மாவட்ட தோ்தல் அதிகாரி!

ஐஆா்எஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்: சிபிஐ இணை இயக்குநருக்கு 3 மாதம் சிறை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

