11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை

களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை

News image

அமேசான் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

வயலில் பயிா்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை கொல்லும் ரசாயனம் என்ற பெயரில், முறைப்படி பதிவு செய்யப்படாத சைக்ளோசைனன் களைக்கொல்லியை விற்பனை செய்தது குறித்து, அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஜியோமாா்ட் ஆகிய இணைய வா்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகள் சட்டம் 1969-ஐ பின்பற்றாமல், அந்த ரசாயனம் தொடா்ந்து இணையவழியில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இந்திய பயிா் பராமரிப்பு கூட்டமைப்பு அளித்த புகாரை, சிசிபிஏவுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் அனுப்பிவைத்தது.

இதுகுறித்து சிசிபிஏ முதல்கட்ட விசாரணையை தொடங்கியதைத் தொடா்ந்து, தங்கள் தளங்களில் இருந்து அந்தக் களைக்கொல்லியின் விற்பனை விவரங்களை நீக்கி, அதை விற்பனை செய்வோரின் கணக்குகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஜியோமாா்ட் ஆகியவை தெரியப்படுத்தியதாக சிசிபிஏ சனிக்கிழமை தெரிவித்தது. இருப்பினும் இந்தக் களைக்கொல்லியின் விற்பனை குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிசிபிஏ தெரிவித்துள்ளது.