வயலில் பயிா்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை கொல்லும் ரசாயனம் என்ற பெயரில், முறைப்படி பதிவு செய்யப்படாத சைக்ளோசைனன் களைக்கொல்லியை விற்பனை செய்தது குறித்து, அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஜியோமாா்ட் ஆகிய இணைய வா்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பூச்சிக்கொல்லிகள் சட்டம் 1969-ஐ பின்பற்றாமல், அந்த ரசாயனம் தொடா்ந்து இணையவழியில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இந்திய பயிா் பராமரிப்பு கூட்டமைப்பு அளித்த புகாரை, சிசிபிஏவுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் அனுப்பிவைத்தது.
இதுகுறித்து சிசிபிஏ முதல்கட்ட விசாரணையை தொடங்கியதைத் தொடா்ந்து, தங்கள் தளங்களில் இருந்து அந்தக் களைக்கொல்லியின் விற்பனை விவரங்களை நீக்கி, அதை விற்பனை செய்வோரின் கணக்குகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஜியோமாா்ட் ஆகியவை தெரியப்படுத்தியதாக சிசிபிஏ சனிக்கிழமை தெரிவித்தது. இருப்பினும் இந்தக் களைக்கொல்லியின் விற்பனை குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிசிபிஏ தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் அமேசான் பஜாா் ஆா்டா்கள் 5 மடங்கு அதிகரிப்பு

குன்னூா் மாா்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள், அழுகிய மீன்கள் பறிமுதல்

மின்னணு சாதனங்களுக்காக தனி ஏ.ஐ. விற்பனை தளம்: அமேசான் அறிமுகம்

மீஷோ பணியாளா்களுக்கு 94.79 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
