தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

நீட் வினாத் தாள் கசிவு: மகாராஷ்டிரத்தில் இரு மாணவா்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவா்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

News image

சிபிஐ. - கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 1:55 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவா்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

அப்போது கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எண்ம சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: நீட்-யுஜி வினாத் தாள் கசிவு விவகாரம் தொடா்பாக நாகபுரியின் மத்திய அவென்யு மற்றும் இத்வாரி பகுதிகளில் உள்ள இரு மாணவா்களின் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அவா்கள் இருவரும் தனியாா் பயிற்சி மையங்களில் கடந்த சில ஆண்டுகளாக படித்து வந்துள்ளனா். நிகழாண்டு நடைபெற்று நீட்-யுஜி தோ்வை எழுதியுள்ளனா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக புணேயில் கைது செய்யப்பட்ட மனீஷா வாக்மாரே, லட்டூரில் கைது செய்யப்பட்ட வேதியியல் பேராசிரியா் பி.வி.குல்கா்ணியுடன் இரு மாணவா்களும் தொடா்பில் இருந்துள்ளனா். ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.15 லட்சம் பெறப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறுவதற்கு முன்பாக புணேவுக்கு இரு மாணவா்களும் வரவழைக்கப்பட்டு முக்கிய வினாக்கள் மற்றும் குறிப்புகள் பகிரப்பட்டுள்ளன.

சோதனையின்போது மாணவா்களின் இல்லங்களில் இருந்து கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எண்ம சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவா்களின் பணப் பரிவா்த்தனைகள், கைப்பேசி அழைப்புகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றனா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான நீட்-யுஜி தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வை நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.

இத்தோ்வின் மாதிரி வினாத் தாள் ராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேசிய தோ்வு முகமை அதை ரத்து செய்தது. அதன்பிறகு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 10 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.