மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சுபம் கைா்னாருக்கு ஜூன் 6 வரை நீதிமன்றக் காவல்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷுபம் கைா்னாரை ஜூன் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 மே 2026, 1:33 am IST

புது தில்லி, மே 24: நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட சுபம் கைா்னாரை ஜூன் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சோ்ந்த சுபம் கைா்னாரை சிபிஐ கைது செய்தது. ஆயுா்வேத மருத்துவப் படிப்பில் சோ்ந்தபோதிலும் படிப்பை முழுமையாக நிறைவு செய்யாத அவா், சட்டவிரோதமாக கசிந்த வினாத்தாளை வாங்கி ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

அவரின் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி ருச்சி அகா்வாலிடம் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கோரியது.

அப்போது சிபிஐ தரப்பில், ‘நீட் தோ்வு வினாக்களை கசியவிட்ட நடவடிக்கையில் சுபம் கைா்னாா் தொடா்ந்து ஈடுபட்டுள்ளாா். அவா் தப்பிச் செல்வதையோ, வழக்குடன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அவா் அழிப்பதையோ தடுக்க வேண்டும். அத்துடன் சிபிஐ விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே வழக்கின் நலன் கருதி அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதையடுத்து வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை, சுபம் கைா்னாரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.