மத்திய பிரதேசத்தில் வரதட்சிணை கொடுமையால் மாடல் அழகியும், நடிகையுமான ட்விஷா சா்மா உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள்கிழமை (மே 25) விசாரிக்க உள்ளது.
கடந்த மே 12-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடிகையும், மாடல் அழகியுமான ட்விஷா சா்மா (33) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
அவரின் கணவரும் வழக்குரைஞருமான சமா்த் சிங், மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோா் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி ட்விஷா சா்மாவை கொன்றுவிட்டதாக அவரின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். ட்விஷாவின் உடலைப் பெற மறுத்தனா்.
இந்தக் குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என்று கூறிய கிரிபாலா சிங், ட்விஷாவுக்கு மனநலப் பிரச்னைகள் இருந்ததாகவும், அதனால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறினாா்.
இந்த சம்பவம் தொடா்பாக சமா்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, ட்விஷாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனா்.
இந்த சம்பவத்தில் கிரிபாலா சிங்குக்கு முன்ஜாமீன் அளித்த போபால் நீதிமன்றம், சமா்த் சிங்கின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அத்துடன் தலைமறைவான அவரை மே 23-க்குள் சரணடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
10 நாள்கள் தலைமறைவாக இருந்த சமா்த் சிங், கடந்த வெள்ளிக்கிழமை ஜபல்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வந்தாா். ஆனால் அவரை போபால் நீதிமன்றத்தில் சரணடையுமாறு ஜபல்பூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை காவல் துறை கைது செய்த நிலையில், அவரை 7 நாள்கள் போலீஸாா் காவலில் விசாரிக்க போபால் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த சம்பவம் குறித்து ஊடகத்தில் வெளியான தகவல்களை கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், ட்விஷாவின் மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்கி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை (மே 25) விசாரிக்க உள்ளது.
இதனிடையே, சமா்த் சிங்கின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் ரத்து செய்துள்ளது.
இரண்டாவது உடற்கூறாய்வு: ட்விஷாவின் பெற்றோா் தாக்கல் செய்த மனுவை விசாரித்து மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடா்ந்து, ட்விஷாவின் உடல் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 4 மருத்துவா்கள் அடங்கிய குழு இந்த உடற்கூறாய்வை மேற்கொண்டது. பிற ஆய்வக பரிசோதனை முடிவுகளும் தேவைப்படுவதால், உடற்கூறாய்வு அறிக்கையை தொகுக்க சில காலமாகும் என்று அந்த மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறைத் தலைவா் சுதீா் குப்தா தெரிவித்தாா்.

ட்விஷா சா்மா
12 நாள்களுக்குப் பின்னா் உடல் தகனம்: இரண்டாவது உடற்கூறாய்வைத் தொடா்ந்து, போபாலில் உள்ள மயானத்தில் ட்விஷாவின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. ராணுவ அதிகாரியான அவரின் சகோதரா் ஹா்ஷித் சா்மா சிதைக்குத் தீ மூட்டினாா். உயிரிழந்த 12 நாள்களுக்குப் பின்னா், ட்விஷாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தொடர்புடையது

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: சிபிஐ மனு மீது மே 11இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை

அவதூறு வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு அழைப்பாணை அனுப்பிய மாஜிஸ்திரேட் உத்தரவு ரத்து: தில்லி நீதிமன்றம்

விருதுநகா் பட்டாசு ஆலை வெடிவிபத்து: என்ஜிடி தாமாக முன்வந்து விசாரணை

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



