கடும் வெய்யிலில், 90 வயதான தன்னுடைய மாமியாரை, பழங்குடியினப் பெண் ஒருவர் 4 கி.மீ. க்கு முதுகில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டதற்கு, அவர் கண்ணீருடன் அளித்த பதில் கேட்பவர்களை பதற வைத்தது.
வங்கியில், தன்னுடைய மாமியாருக்கு கேஒய்சி நடைமுறையை செய்யாததால் நிறுத்தப்பட்ட முதியவர்களுக்கான ஓய்வூதியத்தைப் பெற, 90 வயது மாமியாரை வேறு வழியின்றி முதுகில் கட்டி சுமந்துசெல்வதாக அழுதபடிக் கூறியிருக்கிறார்.
மாத உதவித் தொகை ரூ.500, கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாததால், குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், அதனைப் பெறவே மாமியாரை தூக்கிச் செல்வதாகவும் கூறுகிறார். அந்தப் பெண்ணுக்கும் 50 வயதிருக்கும்.
கடந்த ஜனவரி மாதம்தான் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அவரை நேரடியாக வங்கிக்கு அழைத்து வந்து கேஒய்சி நடைமுறையை பூர்த்தி செய்தால்தான் மாத உதவித் தொகையான ரூ.500 வழங்கப்படும் என மத்திய வங்கி வழங்கியிருக்கிறது.
எனவே, மாமியானரை மே 22ஆம் தேதி அழைத்துச் சென்று வங்கியில் காண்பித்த பிறகு, நிலுவைத் தொகை ரூ.2,000 அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நிர்வாகத்தினர் கூறுகையில், வயதானவர்களுக்கு வீடு தேடி உதவித்தொகை வழங்கப்படும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சியினதோ, வீடு வீடாகச் சென்று தலைவர்கள் வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால், உதவித் தொகைக்காக முதியவரை வங்கிக்கு அலைக்கழிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
Summary
Tribal woman carries mother-in-law on her back in scorching sun! For Rs.500?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








