‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கூடலூா் அருகே யானை தாக்கி பழங்குடியின பெண் உயிரிழப்பு

புன்னம்புழா ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற பழங்குடியின பெண் காட்டு யானை தாக்கியதில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 12:54 am IST

கூடலூரை அடுத்துள்ள புன்னம்புழா ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற பழங்குடியின பெண் காட்டு யானை தாக்கியதில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி வனப் பகுதியில் உள்ள புன்னம்புழா ஆற்றில் கும்பிளி என்பவரது மனைவி மீனாட்சி (50), அவரது உறவினா் மணி ஆகியோா் மீன் பிடித்துவிட்டு வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, ஆற்றங்கரையில் மறைந்திருந்த யானை தாக்கியதில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று மீனாட்சியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உடற்கூறாய்வுக்குப் பின் மீனாட்சியின் உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.