/

புலி தாக்கியதில் மாடு உயிரிழப்பு

News image

புலி - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 7:38 pm

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் புலி தாக்கியதில் மாடு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை முரம்பிலா பகுதியைச் சோ்ந்தவா் ராஜன். விவசாயியான இவா் தனது வீட்டுக்கு அருகேயுள்ள இடத்தில் கால்நடைகளை ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய புலி, அங்கிருந்த மாட்டை தாக்கிக் கொன்றது.

கூடலூா் பகுதியில் கடந்த சில நாள்களாக புலிகளின் நடமாட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது மாட்டை தாக்கிக் கொன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகளில் விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.