பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

வல்லுறவு வழக்கு: ஆசாராமின் ஆயுள் தண்டனை உறுதி! சரணடைய உத்தரவு!

ஆசாராமின் ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

News image

ஆசாராம் பாபு - கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 4:00 pm IST

வல்லுறவு வழக்கில் ஆசாராம் பாபுவின் ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் ஷாஜகான்பூரைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தன்னைத் தானே சாமியார் என அறிவித்துக்கொண்ட ஆசாராமுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று(மே 27) உறுதி செய்துள்ளது.

அதேசமயம், விடுதிக் காப்பாளர் ஷில்பி மற்றும் சேவாதார் சரத் சந்திரா ஆகியோரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, ஆசாராம் பாபு உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆசாராம் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விடுதிக் காப்பாளர் ஷில்பி மற்றும் சேவாதார் சரத் சந்திரா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மூவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீனில் வெளியே உள்ள நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக உயர் நீதிமன்றம் இந்த ஜாமீனை ஜூலை 7 ஆம் தேதி வரை நீட்டித்தது.

இந்த இடைக்கால ஜாமீன், ஜூலை 7 ஆம் தேதி வரை அல்லது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஆசாராம் தாக்கல் செய்த மனு மீதான ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை அமலில் இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Summary

The Rajasthan High Court has upheld Asaram Bapu's life sentence in a rape case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.