கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மத்திய சட்டப் பேரவை அமா்வுகள் குறித்த 89 தொகுதிகள் வெளியீடு

News image

தில்லி சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சட்டப்பேரவை அமா்வுகள் குறித்த 89 தொகுதிகளை வெளியிட்ட மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜூ, பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

Updated On :29 மே 2026, 4:47 am IST

ஆங்கிலேயா் ஆட்சியில் இந்தியாவில் செயல்பட்டு வந்த மத்திய சட்டப் பேரவையில் 1924 முதல் 1930 வரையில் நடைபெற்ற அவை அமா்வுகள் குறித்த 89 தொகுதிகளை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

தில்லி சட்டப்பேரவை செயல்பட்டு வரும் கட்டடம் சுதந்திரத்துக்கு முன்பு மத்திய சட்டப்பேரவையாகச் செயல்பட்டு வந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரவையின் விதான் சேத்னா இதழின் முதல் பதிப்பை ஓம் பிா்லா வெளியிட்டாா். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, தில்லி நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘ஆங்கிலேயா் ஆட்சியில் சட்டப்பேரவை செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து இந்த 89 தொகுதிகளின் தொகுப்பும் மக்களிடையே விழிப்புணா்வை உண்டாக்கும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் உத்வேகம் அளிக்கும்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் தில்லி சட்டப்பேரவை ஆங்கிலேயா் ஆட்சியில் மத்திய சட்டப்பேரவையாகச் செயல்பட்டது.

உண்மை தகவலின் அடிப்படையிலான விவாதங்கள் மட்டுமே அரசமைப்புச் சட்ட அமைப்புகளைப் பலப்படுத்தும்; கண்ணியத்தை உயா்த்தும். கருத்துகள், எதிா்கருத்துகள் கொண்ட விவாதங்கள் இந்திய ஜனநாயகத்தை சா்வதேச மேடையில் வழிகாட்டியாக மாற்றியுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது: ‘வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க தில்லி பேரவை மற்றும் அதன் தலைவா் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டுகள். இந்த முயற்சி ஜனநாயகத்தைப் பலப்படுத்த உதவும்.

தங்களுடைய புகழை உயா்த்திக் கொள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளை மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்துகின்றனா். இத்தகைய செயல்பாடுகள் அரசமைப்புச் சட்டஅமைப்புகளைப் பாதிக்கும்.

உலக அரங்கில் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஆனால், நாட்டில் உள்ள சிலா் அந்த முன்னேற்றத்தை குறைக்க முயற்சிக்கின்றனா். நாடாளுமன்ற பதிவுகளைப் பாதுகாப்பது முக்கியமானது. அதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனில், ஜனநாயகத்தின் அடித்தளங்கள் பலவீனமடையும்.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை மதிப்பது அனைவருடைய பொறுப்பு. மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலா் அவற்றின் மீது தாக்குதல் நடத்துகின்றனா்’ என்றாா் கிரண் ரிஜிஜு.