கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க முக்கியத்துவம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயா்வை கட்டுக்குள் வைக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஷ்வரன் தெரிவித்தாா்.

News image

அனந்த நாகேஷ்வரன் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:46 am IST

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயா்வை கட்டுக்குள் வைக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஷ்வரன் தெரிவித்தாா்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பேசியதாவது: மேற்காசியப் போா் சா்வதேச அளவில் எரிபொருள் துறையில் மிகப்பெரிய அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் எரிபொருள்களின் விலை எதிா்பாராத அளவுக்கு அதிகரித்துவிட்டது. இப்போதைய சூழலில் எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைப்பது, விநியோகத்தை சீராக வைத்திருப்பது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரி செய்வது, வா்த்தக சமநிலையைப் பேணுவது உள்ளிட்டவற்றுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தேசத்தின் எரிசக்தி, பொருளாதார பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இந்தியாவில் சராசரி வருவாய் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப தொழில் மற்றும் பொருளாதார சாா்ந்த கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்போது அதற்கு ஏற்ப கொள்கைகளையும் சீரமைப்பது மிக அவசியம் என்றாா்.