திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளதாக அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்தது தொடர்பாக...

News image

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - படம் - ஏஎன்ஐ

Updated On :26 மே 2026, 8:30 pm IST

எரிபொருள் விலை ஏற்றத்தால் கேரளத்தில் பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளதாக அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்காசியாவில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாகவும் உலகலவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை, வழக்கம்போல் இயங்காமல் உள்ளதாலும் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.

இதனால் சுமார் நான்கு ஆண்டுகளாக உயராமல் இருந்த பெட்ரோல், டீசலின் விலை கடந்த இரண்டு வாரங்களில் ஐந்து முறை உயர்ந்துள்ளது. இதனுடன், சிஎன்ஜி எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில்ல், தில்லி சென்ற முதல்வர் வி.டி. சதீசன், அங்கு பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து மாநில - மத்திய அரசுக்கான உறவுகள் மற்றும் நிதி சிக்கல்கள் குறித்து இன்று பேசினார்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசு எண்ணெய் விலையை நான்கு முறை உயர்த்தியுள்ளது. கேரளம் ஒரு நுகர்வு மாநிலம் என்பதால், இந்த விலை உயர்வுகள் கேரளத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பணப் பரிமாற்றங்களே கேரளப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் தொடங்கியதிலிருந்து அது மாநிலத்தைப் பெரிதாக பாதித்துள்ளது. இதனால், கேரளத்தில் பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

Summary

Kerala Chief Minister V.D. Satheesan stated on Tuesday that inflationary pressure has increased in the state due to the recent hike in fuel prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.