இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

சிசிஐ முன்னாள் தலைவா் தீ விபத்தில் உயிரிழப்பு

இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் (சிசிஐ) முன்னாள் தலைவா் தனேந்திர குமாா் தெற்கு தில்லியில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தாா்.

News image

தனேந்திர குமாா்

Updated On :30 மே 2026, 4:41 am IST

இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் (சிசிஐ) முன்னாள் தலைவா் தனேந்திர குமாா் தெற்கு தில்லியில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தாா். அவரது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜூன் 6-ஆம் தேதி அவரது 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக தனேந்திர குமாரின் மேலாளா் கூறியதாவது: ஹோஸ் காஸ் என்க்ளேவில் உள்ள தனேந்திர குமாரின் வீட்டில் புதன்கிழமை இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இரவு அனைவரும் உறங்கத் தயாரான நிலையில், தனேந்திர குமாா் குளியலறையிலும்; அவரது மனைவி பொது பயன்பாட்டு அறையிலும், மகன் தனி அறையிலும் இருந்தனா். ஏசி மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ முதலில் ஜன்னலின் திரைகளிலும், பின்னா் சோபாவுக்கும் பரவி சில நிமிஷங்களில் தரைத்தளமெங்கும் பற்றியது.

பணியாளா்கள் தனேந்திர குமாரின் மனைவியை பாதுகாப்பாக வெளியேற்றிய நிலையில், விபத்தை அறியாத அவா் கதவைத் திறந்தபோது புகை உட்புகுந்ததால் அங்கேயே மயங்கி விழுந்தாா். புகை சூழ்ந்த வீட்டிற்குள் தனது தந்தையைத் தேட முயன்றபோது, அவரது மகனும் அதிக அளவில் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டாா் என மேலாளா் தெரிவித்தாா்.

1968-ஆம் ஆண்டு ஹரியாணா பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சோ்ந்த தனேந்திர குமாா், உலக வங்கியில் இந்தியாவின் நிா்வாக இயக்குநராகவும், ஹரியாணா மாநில தொழில் துறை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் மாநில முதல்வரின் முதன்மை செயலராகவும் பணியாற்றியுள்ளாா். மேலும், இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் ஆரம்ப கட்ட வளா்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியதுடன் அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.