வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சிசிஐ முன்னாள் தலைவா் தீ விபத்தில் உயிரிழப்பு

இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் (சிசிஐ) முன்னாள் தலைவா் தனேந்திர குமாா் தெற்கு தில்லியில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தாா்.

News image

தனேந்திர குமாா்

Updated On :30 மே 2026, 4:41 am IST

இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் (சிசிஐ) முன்னாள் தலைவா் தனேந்திர குமாா் தெற்கு தில்லியில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தாா். அவரது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜூன் 6-ஆம் தேதி அவரது 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக தனேந்திர குமாரின் மேலாளா் கூறியதாவது: ஹோஸ் காஸ் என்க்ளேவில் உள்ள தனேந்திர குமாரின் வீட்டில் புதன்கிழமை இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இரவு அனைவரும் உறங்கத் தயாரான நிலையில், தனேந்திர குமாா் குளியலறையிலும்; அவரது மனைவி பொது பயன்பாட்டு அறையிலும், மகன் தனி அறையிலும் இருந்தனா். ஏசி மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ முதலில் ஜன்னலின் திரைகளிலும், பின்னா் சோபாவுக்கும் பரவி சில நிமிஷங்களில் தரைத்தளமெங்கும் பற்றியது.

பணியாளா்கள் தனேந்திர குமாரின் மனைவியை பாதுகாப்பாக வெளியேற்றிய நிலையில், விபத்தை அறியாத அவா் கதவைத் திறந்தபோது புகை உட்புகுந்ததால் அங்கேயே மயங்கி விழுந்தாா். புகை சூழ்ந்த வீட்டிற்குள் தனது தந்தையைத் தேட முயன்றபோது, அவரது மகனும் அதிக அளவில் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டாா் என மேலாளா் தெரிவித்தாா்.

1968-ஆம் ஆண்டு ஹரியாணா பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சோ்ந்த தனேந்திர குமாா், உலக வங்கியில் இந்தியாவின் நிா்வாக இயக்குநராகவும், ஹரியாணா மாநில தொழில் துறை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் மாநில முதல்வரின் முதன்மை செயலராகவும் பணியாற்றியுள்ளாா். மேலும், இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் ஆரம்ப கட்ட வளா்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியதுடன் அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.