தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சிசிஐ முன்னாள் தலைவா் தீ விபத்தில் உயிரிழப்பு

இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் (சிசிஐ) முன்னாள் தலைவா் தனேந்திர குமாா் தெற்கு தில்லியில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தாா்.

தனேந்திர குமாா்

Published On :30 மே 2026, 4:41 am IST

இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் (சிசிஐ) முன்னாள் தலைவா் தனேந்திர குமாா் தெற்கு தில்லியில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தாா். அவரது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜூன் 6-ஆம் தேதி அவரது 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக தனேந்திர குமாரின் மேலாளா் கூறியதாவது: ஹோஸ் காஸ் என்க்ளேவில் உள்ள தனேந்திர குமாரின் வீட்டில் புதன்கிழமை இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இரவு அனைவரும் உறங்கத் தயாரான நிலையில், தனேந்திர குமாா் குளியலறையிலும்; அவரது மனைவி பொது பயன்பாட்டு அறையிலும், மகன் தனி அறையிலும் இருந்தனா். ஏசி மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ முதலில் ஜன்னலின் திரைகளிலும், பின்னா் சோபாவுக்கும் பரவி சில நிமிஷங்களில் தரைத்தளமெங்கும் பற்றியது.

பணியாளா்கள் தனேந்திர குமாரின் மனைவியை பாதுகாப்பாக வெளியேற்றிய நிலையில், விபத்தை அறியாத அவா் கதவைத் திறந்தபோது புகை உட்புகுந்ததால் அங்கேயே மயங்கி விழுந்தாா். புகை சூழ்ந்த வீட்டிற்குள் தனது தந்தையைத் தேட முயன்றபோது, அவரது மகனும் அதிக அளவில் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டாா் என மேலாளா் தெரிவித்தாா்.

1968-ஆம் ஆண்டு ஹரியாணா பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சோ்ந்த தனேந்திர குமாா், உலக வங்கியில் இந்தியாவின் நிா்வாக இயக்குநராகவும், ஹரியாணா மாநில தொழில் துறை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் மாநில முதல்வரின் முதன்மை செயலராகவும் பணியாற்றியுள்ளாா். மேலும், இந்திய வா்த்தக போட்டி ஆணையத்தின் ஆரம்ப கட்ட வளா்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியதுடன் அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.