‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பண்ருட்டியில் கூரை வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருள்கள் எரிந்து சேதம்

பண்ருட்டி அருகே கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image

கூரை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள்.

Updated On :23 மே 2026, 12:25 am IST

பண்ருட்டி அருகே கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி கொக்குபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த யாசகத்தின் மகன் காங்காதுரை (40), குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.