ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
வெங்காடு பகுதியில் வீட்டு உபயோக பொருள்களை சுத்தம் செய்யும் ரசாயனத்தை தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு உற்பத்தி பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளது.
இதுகுறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத் துறையினா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை சுமாா் 1 மணி நேரம் க போராடி அணைத்தனா்.
இருந்த போதிலும் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல லடசம் மதிப்புள்ள உற்பத்தி பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தீ விபத்து: மரங்கள் சேதம்

காஞ்சிக்கோவில் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ

தகியா காலே கான் பகுதியில் தீ விபத்து: 30 குடிசைகள் சேதம்

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



