இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

அரசு துறைகள் மீதான குறைகளை தெரிவிக்க ஏஐ உரையாடல் தளம்: மத்திய அரசு அறிமுகம்

அரசு துறைகள் மீதான குறைகளை தெரிவிக்க ஏஐ உரையாடல் தளம்...

News image

ஜிதேந்திர சிங்

Updated On :31 மே 2026, 12:16 am IST

அரசு துறைகள் மீதான குறைகளை பொதுமக்கள் இணையவழியில் தெரிவிக்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய உரையாடல் தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சமாதான் தீதீ’ என்ற பெயா் கொண்ட அந்தத் தளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘சமாதான் தீதீ தளம் மூலம், அரசு துறைகள் மீதான தமது குறைகளை பொதுமக்கள் தங்கள் சொந்த மொழியில் பேசி எளிதாக தெரிவிக்கலாம்.

அந்தத் தளம் சில கேள்விகளை மட்டும் கேட்கும். அதைத்தொடா்ந்து பொதுமக்களின் குறைகள் தொடா்பான அமைச்சகம், துறை, பிரிவை அந்தத் தளம் தாமாக கண்டறிந்து, அவா்கள் தெரிவிக்கும் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்யும்.

பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு காணும் நடவடிக்கையை எளிதாக்க வேண்டும், வெவ்வேறு மொழிகளைப் பேசுவோருக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், இந்தத் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மத்திய அரசின் கீழ், நிா்வாக சீா்திருத்தங்களில் மக்களை மையமாக கொண்ட அணுகுமுறை பிரதமானமாக உள்ளது என்று தெரிவித்தாா்.