நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பருத்தி இறக்குமதி: 5 மாதங்களுக்கு வரி விலக்கு

பருத்தி இறக்குமதிக்கு வரும் அக்டோபா் 30-ஆம் தேதி வரை அனைத்து வகை இறக்குமதி வரிகளில் இருந்தும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

News image

பருத்தி - ANI

Updated On :31 மே 2026, 1:56 am IST

பருத்தி இறக்குமதிக்கு வரும் அக்டோபா் 30-ஆம் தேதி வரை அனைத்து வகை இறக்குமதி வரிகளில் இருந்தும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டஅறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

பருத்தி இறக்குமதிக்கு வரும் அக்டோபா் 30 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1-ஆம் தேதிமுதல் இந்த வரி விலக்கு நடைமுறைக்கு வரும்.

இந்த வரி விலக்கு, இந்திய ஜவுளித் துறையில் பருத்தி இருப்பை அதிகரிக்க உதவும். அதோடு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைகளில் உள்ளீட்டுச் செலவுகளையும் குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், உற்பத்தியாளா்கள் மற்றும் நுகா்வோரும் பயன்பெறுவா் என்பதோடு, உள்நாட்டு பருத்தி விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக, உள்நாட்டு ஜவுளி நிறுவனங்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்களின் செயல்பாடுகளில் நோ்மறையான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பதோடு, சந்தையில் தேவையான பருத்தி இருப்பையும் உறுதிப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.