நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு

பருத்தி இறக்குமதிக்கு தற்காலிக சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

பருத்தி - ANI

Updated On :30 மே 2026, 10:15 pm IST

புது தில்லி : பருத்தி இறக்குமதிக்கு தற்காலிக சுங்க வரி விலக்கு அளித்து மத்திய அரசு சனிக்கிழமை (மே 30) உத்தரவிட்டது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு 2026 ஜூன் 1 முதல் 2026 அக்டோபர் 31 வரை பருத்தி இறக்குமதி மீதான அனைத்து சுங்க வரிகளுக்கும் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

சந்தையில் பருத்தி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், உள்நாட்டு ஜவுளித் தொழில்துறையின், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை அமையும் என்று அரசால் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காலிக வரி விலக்கு நடவடிக்கை ஜவுளி மற்றும் ஆடைத் துறை முழுவதும் உள்ளீட்டு செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு இலக்கு நிவாரணம் கிடைக்கும், அதே நேரத்தில் உள்நாட்டு விவசாயிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Govt exempts import duty on cotton for five months till October 30, 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.