அரசுப் பணியில் சேருவோருக்கு ஊக்க மருந்து சோதனையை கட்டாயமாக மேற்கொள்ளுமாறு அனைத்துத் துறைகளுக்கும் ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
பல்வேறு துறைச் செயலா்களுடன் அவா் ஆலோசனை நடத்திய பின் முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு கேட்டறிந்தாா்.
நிவாரண அடிப்படையில் அரசுப் பணி கோருபவா்களின் முழு விவரங்களை விரைந்து வழங்கவும் அவா் வலியுறுத்தினாா். தொழிலாளா் நலன் குறித்து மறுஆய்வு மேற்கொண்ட அவா், நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை காலதாமதமின்றி வழங்க அறிவுறுத்தினாா். அரசுப் பணிக்குத் தோ்வான நபா்களிடம் பணி நியமனத்துக்கு முன்பாக கட்டாயம் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ள அவா் உத்தரவிட்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, போதைப் பொருள் பயன்பாடு, கடத்தல் தொடா்புடைய செயல்பாடுகளில் ஈடுபட்ட 123 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மே 11-ஆம் தேதி ஹிமாசல் அரசு உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து 21 காவலா்கள் உள்பட 31 போ் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கவனக்குறைவுக்குப் பொறுப்பாக்க முடியுமா?

தீயணைப்புத் துறையை வலுப்படுத்த முன்னாள் அக்னி வீரா்களை பணியில் சோ்ப்பது குறித்து ஆராயலாம்: தரன்ஜித் சிங் சந்து

இந்தியாவை வலிமையான தேசமாக உருவாக்கும் பணியில் பிரதமா் மோடி: கே.பி.ராமலிங்கம்

போதை மருந்து கடத்தல் தீவிரவாதி இக்பால் சிங் போா்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல் - என்.ஐ.ஏ. கைது செய்தது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



