FOLLOW US

ON GOOGLE DISCOVER

கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

இந்துத்துவ ஆதரவாளர் மீது நடவடிக்கை கோரி சிஜேபி போராட்டம்!

ஜந்தர் மந்தரில் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டம் பற்றி..

CJP protests

சிஜேபி போராட்டம் - PTI

Published On :4 செப்டம்பர் 2026, 1:10 pm IST

ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டத்தின்போது சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிஷு ஆசாத் என்பவரின் தந்தையான சஞ்சய் குமாரைத் தாக்கிய இந்துத்துவ ஆதரவாளரும் சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்வதந்த்ர பரத்வாஜ் மீது நடவடிக்கை கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்வதந்த்ர பரத்வாஜ், சஞ்சய் குமாரைத் தாக்கியதாகக் கூறிய நேர்காணல் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற வீதியின் காவல் நிலையத்திற்கு அருகே சிஜேபியினர் திரண்டுள்ளனர். பரத்வாஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தில்லி காவல்துறை தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள சிஜேபி, சஞ்சய்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள் தில்லி காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இருப்பினும், சஞ்சயின் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் தகவலைத் தில்லி காவல்துறை மறுத்துள்ளது.

போராட்டத்தின்போது நடைபெற்ற கைகலப்பில் அவருக்குச் சிறிய அளவிலான காயமே ஏற்பட்டதாகவும், அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க, கூடுதல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.