கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

தில்லி பல்கலை. விடுதிகளின் உள்கட்டமைப்புகள்: அறிக்கை கோரும் தேசிய மனித உரிமை ஆணையம்!

தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகள் குறித்த விரிவான அறிக்கை கோரி, தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது குறித்து...

National Human Rights Commission

தேசிய மனித உரிமை ஆணையம் - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 4:39 pm IST

தில்லி பல்கலைக்கழம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளின் விடுதிகள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகள் குறித்த விரிவான அறிக்கை கோரி, தேசிய மனித உரிமை ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப். 9) கடிதம் எழுதியுள்ளது.

தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் தங்கும் விடுதியின் கீழ்தளத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னை இருந்ததால், அதனை சரி செய்யும் பணி சட்டவிரோதமாக நடைபெற்று வந்த நிலையில், அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் பலியாகினர்.

இடிந்து விழுந்த கட்டடம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், அஸ்திவராத் தூண்கள் அமைக்கப்படாமல் கட்டடம் சட்டவிரோதமாக இருந்துள்ளதும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதன் விளைவாக, தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகள், நிறுவனங்களில் உள்ள விடுதி உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் குறித்த விரிவான அறிக்கை கோரி, தலைமைச் செயலர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், தில்லி அரசாங்கம் ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

தற்போதுள்ள தங்கும் விடுதிகளின் அளவு மற்றும் உள்கட்டமைப்பையும், அத்துடன் புதிய மற்றும் கூடுதல் தங்கும் விடுதிகளின் தேவை மற்றும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய அறிக்கையைத் தயாரிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், “இந்தத் துயரச் சம்பவத்துக் கட்டட உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் மாணவர்களுக்குப் போதுமான தங்கும் வசதிகளை வழங்கத் தவறிய தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி பல்கலைக்கழகமும் பொறுப்பு” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The National Human Rights Commission wrote a letter on Tuesday (Sept. 9) seeking a detailed report regarding the hostels and infrastructure of Delhi University and its affiliated colleges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.