விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பிரிக்ஸ் உச்சி மாநாடு: மலேசிய பிரதமர் இந்தியா வருகை! கேரளத்தில் சுற்றுப்பயணம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகிறார்...

malaysia pm anwar ibrahim

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகை... - எக்ஸ்

Published On :

18 ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியாவுக்கு வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு இந்திய அரசின் தலைமையில் தலைநகர் தில்லியில் வரும் செப். 12 மற்றும் செப். 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஏராளமான உலகத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று (செப். 11) தலைநகர் தில்லிக்கு வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் மலேசிய பிரதமர் இப்ராஹிம் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இத்துடன், மலேசிய பிரதமர் இப்ராஹிம் மாநாட்டில் பங்கேற்கும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் மற்றும் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது ஆகியோர் உடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கேரளத்துக்குச் சுற்றுப்பயணமாகச் செல்லும் மலேசிய பிரதமர் இப்ராஹிம் அங்கு இந்தியாவின் கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியாரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஈரானிய அதிபர் பெஷேஷ்கியன் ஆகியோர் இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been announced that Malaysian Prime Minister Anwar Ibrahim will visit India to participate in the 18th BRICS summit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.