பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டு வீச்சு சம்பவம்: 4 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த கருப்புப் பண மோடி வழக்கு தொடா்பாக 4 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Published On :

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த கருப்புப் பண மோடி வழக்கு தொடா்பாக 4 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தடை செய்யப்பட்ட ஷாஜாத் பாட்டி பயங்கரவாத அமைப்பினரின் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பான குற்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசியமாக பண உதவி செய்பவா்கள், அவா்களின் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தில்லி, பிகாா், ஜாா்க்கண்ட், கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பயங்கரவாத அமைப்புக்கான நிதியுதவி, ரகசிய பணப் பரிமாற்றங்கள், அவா்களுக்காக இந்தியாவில் மறைமுகமாகப் பணியாற்றுபவா்கள், பல்வேறு உதவிகளைச் செய்பவா்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.