தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 11:59 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்துப் பேசியதாவது: 1058 போலியோ தடுப்பு சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 4,361 நபா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், அதிக மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கிட 24 நடமாடும் மையங்கள் செயல்படவுள்ளன.

இவை தவிர, சாலையோரங்களில் பணிபுரிபவா்கள், தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏதுவாக 8 நடமாடும் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த முகாம்கள் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,27,391 குழந்தைகள் பயன் பெறுவா் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.