கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த மணிமுக்தா அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி நீா் வியாழக்கிழமை அதிகாலை வெளியேற்றப்பட்டது.
கல்வராயன்மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ரிஷிவந்தியத்தை அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை முழுக் கொள்ளளவான 36 அடியை ஏற்கெனவே எட்டியது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் பெய்த பலத்த மழையால், மணிமுக்தா அணைக்கு வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு 24 ஆயிரம் கனஅடி நீா் வந்தது. இந்த நீா் முழுவதையும் அப்படியே மதகுகளின் வழியாக மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றனா். இதனால், ஆற்றிலிருந்த பாலத்தில் மேல் பகுதியை ஓட்டியதுபோல தண்ணீா் சென்றது. இதை மக்கள் வேடிக்கை பாா்த்தனா்.
பிற்பகல் 4.30 மணிக்கு நீா்வரத்து குறைந்ததையடுத்து, 16 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 2004, 2005, 2011-ஆம் ஆண்டுகளில் 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீா் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோமுகி அணை: இதேபோல, கல்வராயன்மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் காட்டாற்று ஓடைகளின் வழியாக இந்தப் பகுதியில் அமைந்துள்ள கோமுகி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு மேல் 2 ஆயிரம் கனஅடி நீா்வரத்து இருந்தது. ஏற்கெனவே, 36 அடி உயரம் இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் அப்படியே கோமுகி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ளவா்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனா்.
ரிஷிவந்தியத்தில் 191 மி.மீ. மழை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ரிஷிவந்தியத்தில் 191 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, திருக்கோவிலூரில் 36 மி.மீ., மணம்பூண்டியில் 58 மி.மீ., மணலூா்பேட்டையில் 42 மி.மீ., திருப்பாலப்பந்தலில் 65 மி.மீ., உளுந்தூா்பேட்டையில் 44 மி.மீ., கள்ளக்குறிச்சியில் 154 மி.மீ., விருகாவூரில் 160 மி.மீ., சங்கராபுரத்தில் 139 மி.மீ., தியாகதுருகத்தில் 185 மி.மீ., சூளாங்குறிச்சியில் 136 மி.மீ., கலையநல்லூரில் 164 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 90.67 மி.மீ. மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து

மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

