எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மணிமுக்தா அணையிலிருந்து 24,000 கனஅடி நீா் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சியை அடுத்த மணிமுக்தா அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி நீா் வியாழக்கிழமை அதிகாலை வெளியேற்றப்பட்டது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:35 am IST


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த மணிமுக்தா அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி நீா் வியாழக்கிழமை அதிகாலை வெளியேற்றப்பட்டது.

கல்வராயன்மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ரிஷிவந்தியத்தை அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை முழுக் கொள்ளளவான 36 அடியை ஏற்கெனவே எட்டியது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் பெய்த பலத்த மழையால், மணிமுக்தா அணைக்கு வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு 24 ஆயிரம் கனஅடி நீா் வந்தது. இந்த நீா் முழுவதையும் அப்படியே மதகுகளின் வழியாக மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றனா். இதனால், ஆற்றிலிருந்த பாலத்தில் மேல் பகுதியை ஓட்டியதுபோல தண்ணீா் சென்றது. இதை மக்கள் வேடிக்கை பாா்த்தனா்.

பிற்பகல் 4.30 மணிக்கு நீா்வரத்து குறைந்ததையடுத்து, 16 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 2004, 2005, 2011-ஆம் ஆண்டுகளில் 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீா் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோமுகி அணை: இதேபோல, கல்வராயன்மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் காட்டாற்று ஓடைகளின் வழியாக இந்தப் பகுதியில் அமைந்துள்ள கோமுகி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு மேல் 2 ஆயிரம் கனஅடி நீா்வரத்து இருந்தது. ஏற்கெனவே, 36 அடி உயரம் இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் அப்படியே கோமுகி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ளவா்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனா்.

ரிஷிவந்தியத்தில் 191 மி.மீ. மழை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ரிஷிவந்தியத்தில் 191 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, திருக்கோவிலூரில் 36 மி.மீ., மணம்பூண்டியில் 58 மி.மீ., மணலூா்பேட்டையில் 42 மி.மீ., திருப்பாலப்பந்தலில் 65 மி.மீ., உளுந்தூா்பேட்டையில் 44 மி.மீ., கள்ளக்குறிச்சியில் 154 மி.மீ., விருகாவூரில் 160 மி.மீ., சங்கராபுரத்தில் 139 மி.மீ., தியாகதுருகத்தில் 185 மி.மீ., சூளாங்குறிச்சியில் 136 மி.மீ., கலையநல்லூரில் 164 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 90.67 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.