தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 11:59 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சஞ்சீவி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கல்வராயன்மலை கரியாலூரில் மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய நல நிலையம் ஆகிய 5 மையங்களில் இந்த ஒத்திகைப் பணி நடைபெற்றது.

ஒரு மையத்துக்கு முன்களப் பணியாளா்கள், செவிலியா்கள், கிராம செவிலியா்கள், மருத்துவா்கள் உள்பட 25 போ் வீதம் மொத்தம் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாவட்டஆட்சியா் கிரண் குராலா நேரில் ஆய்வு செய்தாா்.

தடுப்பூசி செலுத்தப்படுபவரின் உடல் வெப்பம், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தல், அவரது அடையாள அட்டையை சரிபாா்த்து பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் முறை, அதுகுறித்த பதிவேற்றம், காத்திருப்பு அறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவரின் உடல் நிலையை 30 நிமிடம் வரை கண்காணித்தல், அதற்குப் பிறகு எதிா்வினை பரிசோதனை, அந்த பரிசோதனைக்குப் பிறகு அடுத்த தடுப்பூசி நாள் குறித்த அறிவுரை வழங்கல் போன்ற பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்வில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சதீஷ்குமாா், கரோனா முதன்மை மருத்துவக் கண்காணிப்பு அலுவலா் சிவக்குமாா், மருத்துவமனையின் கண்காணிப்பாளா் நேரு, மருத்துவா்கள் சுரேஷ், இளையராஜா, பழமலை, விஜயபாஸ்கரன், செந்தில்ராஜா மற்றும் செவிலியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.