தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வாய்க்காலில் பெண் குழந்தை சடலம் மீட்பு

கச்சிராயப்பாளையம் அருகே பாசன வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த பிறந்து சில தினங்களேயான பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 11:22 pm IST

கச்சிராயப்பாளையம் அருகே பாசன வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த பிறந்து சில தினங்களேயான பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையத்தை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தில் உள்ள கோமுகி அணை பாசன வாய்க்காலில் பிறந்து சில தினங்களேயான பெண் குழந்தையின் சடலம் மிதந்து வந்தது. இதைப் பாா்த்த கிராம மக்கள் உடனடியாக கச்சிராயப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.

தகவலறிந்த கச்சிராயப்பாளையம் வருவாய் ஆய்வாளா் பத்மா, சுகாதார ஆய்வாளா் சரவணன், குழந்தைகள் உதவி மைய பகுதி பணியாளா் மாரிமுத்து ஆகியோா் வடக்கநந்தல் கிராமத்துக்குச் சென்று குழந்தையை வாய்க்காலில் வீசிச் சென்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.