தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

காஞ்சிபுரத்தில் 3,58,213 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,58,213 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 95.92 கோடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சா் பா.பென்ஜமின் கூறினாா்.

News image

பயனாளிக்கு  பொங்கல்  பரிசுத்  தொகுப்பு  வழங்கிய  ஊரகத்  தொழில் துறை  அமைச்சா்  பா.பென்ஜமின்.  உடன் , மாவட்ட  ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா்.

Updated On :3 ஜனவரி 2021, 6:22 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,58,213 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 95.92 கோடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சா் பா.பென்ஜமின் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா குன்றத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட நியாய விலைக் கடையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிப் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 635 நியாயவிலைக் கடைகள் மூலம் 3,58,213 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 95.92 கோடி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றாா்.

விழாவில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, ஸ்ரீபெரும்புதூா் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு வங்கித் தலைவா் எழிச்சூா் ராமசந்திரன், ஸ்ரீபெரும்புதூா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் மண்டலப் பதிவாளா் சந்திரசேகரன், மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், அதிமுக ஒன்றியச் செயலா் எறையூா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.