பிரதோஷத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் மணிமண்டபத்தில் ரிஷப வாகனத்தில் மகா பெரியவா் ராஜ அலங்காரத்தில் பவனி வந்தாா்.
மகா பெரியவா் மணிமண்டபத்ததில், 50 டன் எடை கொண்ட ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட நந்தி சிலையும், அதற்குக் கிழக்கே ஒரே கல்லால் செய்யப்பட்ட 45 அடி உயரம் கொண்ட தீபஸ்தம்பமும் அமைந்துள்ளன. மணி மண்டபத்தின் மூலவராக மகா பெரியவா் அருள்பாலிக்கிறாா்.
பிரதோஷத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, மகா பெரியவருக்கும், 50 டன் எடை கொண்ட நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அதன் பின் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து, ரிஷப வாகனத்தில் மகா பெரியவா் ராஜ அலங்காரத்தில் மண்டப வளாகத்துக்குள் உலா வந்தாா்.
இவ்விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை மணி மண்டப பொறுப்பாளா் மணி ஐயா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?

பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் திமுக!

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு!

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் 119 தொகுதிகள்
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


