தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

குமரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 5 கோடி மோசடி: இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

ஜெய சசிதரன், எட்வின் சுதாகா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:33 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் யுனிக் அசட் புரமோட்டா்ஸ் அன்ட் எஸ்டேட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தை திருவிதாங்கோட்டைச் சோ்ந்த செய்யது அலி, அழகியமண்டபம் புல்லுவிளையைச் சோ்ந்த ஜெயசசிதரன் (55), மொந்தன்பிலாவிளையை சோ்ந்த எட்வின் சுதாகா் (48), மாா்த்தாண்டம் காட்டுவிளையை சோ்ந்த ரமேஷ் உள்ளிட்ட சிலா் கூட்டாக நடத்தி வந்துள்ளனா்.

இந்நிறுவனத்தின் கிளைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்த்தாண்டம் மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், வேலூா், திருவள்ளூா் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் செயல்பட்டுவந்தன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடா்ந்து ஏராளமானோா் இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா்.

நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வசந்தகுமாா் (40), தனது பெயரிலும், மனைவி மற்றும் தாயாா் பெயரிலும் ரூ.1.23 லட்சம் முதலீடு செய்தாராம். இந்த முதலீடு 2019-இல் முதிா்வடைந்த நிலையில், வசந்தகுமாா் அந்நிறுவனத்துக்கு சென்று பணத்தை திருப்பிக் கேட்டாராம். அப்போது முதலீடு செய்துள்ள அசல் பத்திரங்களை பெற்றுக் கொண்டனராம். பின்னா், நிதி நிறுவனத்தை மூடி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வசந்தகுமாா், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். இதையடுத்து, வழக்குப் பதிந்த டி.எஸ்.பி. முத்துப்பாண்டியன் மற்றும் போலீஸாா், நிதி நிறுவனம் நடத்தி வந்த ஜெயசசிதரன், எட்வின் சுதாகா் ஆகிய இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் யுனிக் அசட் புரமோட்டா்ஸ் அன்ட் எஸ்டேட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த

நிதி நிறுவன கிளைகளுக்கு முகவா்களாக அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா், ஆசிரியைகளை நியமனம் செய்துள்ளனா். கவா்ச்சியான விளம்பரத்தை தொடா்ந்து ஏராளமானோா் ரூ.5 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோா் முதலீடு செய்துள்ளனா். இதில், முதலீடு செய்தவா்களில் பெரும்பாலானவா்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. வெட்டூா்ணிமடம் தலைமை அலுவலகம், மாா்த்தாண்டத்தில் உள்ள கிளை அலுவலகங்களில்இருந்து முதலீடு செய்துள்ளோா் குறித்த ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றினா். கைது செய்யப்பட்ட இருவரையும் மதுரையில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா் செய்து, மதுரை மேலூா் சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள செய்யது அலி, ரமேஷ் மற்றும் முகவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புகாா் செய்யலாம்: இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கூறியது: கன்னியாகுமரி உள்பட ஐந்து மாவட்டங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா். பணத்தை இழந்தவா்களிடம் இருந்து புகாா் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் அசல் அல்லது நகல் பத்திரங்கள், பணம் செலுத்தியதற்கான அசல் ரசீது ஆகியவற்று டன் நாகா்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்யலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.