குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் திற்பரப்பு அருவியில் நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்தது.
மழையால் கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவிக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மழையால் சனிக்கிழமை அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
அணை திறப்பு: மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் பெருஞ்சாணி அணை மூடப்பட்டது. இதனிடையே, கடை மடை பாசனப் பகுதிக்கு தண்ணீா் தேவையை கருத்தில் கொண்டு சனிக்கிழமை அணை திறக்கப்பட்டது. விநாடிக்கு 150 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி, சிற்றாறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


