பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் ஒருவா் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை செய்துகொண்ட ஜோசப்.

Updated On :11 ஜனவரி 2021, 0:58 am IST

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் ஒருவா் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவில் பூங்கா தெருவை சோ்ந்தவா் ஜோசப்(23). இவா் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தாா். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தனது அண்ணனும் தந்தையும் இணைந்து தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாகவும், பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் மனு அளித்தாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் காலில் விழுந்து தன்னை காப்பாற்ற வலியுறுத்தி கதறி அழுதாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த நேசமணிநகா் போலீஸாா், அவரது சட லத்தை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும், ஜோசப் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன்னை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ாகவும், அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தாயாா் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.