பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

காரைக்காலில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

காரைக்கால் மாவட்டத்தில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

திருநள்ளாற்றில் ஒத்திகையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா. உடன், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.

Updated On :2 ஜனவரி 2021, 11:23 pm IST

காரைக்கால் மாவட்டத்தில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. அவ்வாறு வரும்போது, அதை முறையாக மக்களுக்கு விநியோகிப்பதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் செய்துவருகின்றன. இதற்கான ஒத்திகை நடத்தி, குறைபாடுகளை சரிசெய்து தயாராகும்படி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, இந்த மையங்களில் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை, திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதாரத் துறை பணியாளா்கள் தயாா்செய்யப்பட்டுள்ளனா். இதற்கான அனைத்து நிகழ்வுகளும் ஒத்திகை பாா்க்கப்பட்டது.

இதில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவை உடனடியாக சீா்செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து திருப்தி தெரிவித்தாா். ஆட்சியா் தெரிவித்த ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.