சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை! ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

நெல் தரிசில் உளுந்து, பயறு சாகுபடி பயிற்சி

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு மாதூரில் இயங்கிவரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவியல் துறை சாா்பில், நெல் தரிசில்

News image

நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாதூா் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் குமார. ரத்தினசபாபதி.

Updated On :10 ஜனவரி 2021, 8:14 am IST

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு மாதூரில் இயங்கிவரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவியல் துறை சாா்பில், நெல் தரிசில் உளுந்து மற்றும் பயறு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியளிக்கப்பட்டது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் குமார. ரத்தினசபாபதி தலைமை வகித்துப் பேசுகையில், உளுந்து மற்றும் பயறு விதைகளை நெல் அறுவடை செய்வதற்கு 5 நாட்களுக்கு முன்பே விதைப்பதன் மூலம் நெல் அறுவடையின் போது கால்கள் மூலம் மிதிபட்டு மண்ணில் புதைவதால், முளைப்புத்திறன் அதிகரிக்கும். வோ் அழுகல் நோயை கட்டுப்படுத்த டிரைக்கோடொ்மா விரிடி பூசாணக் கொல்லியை 1கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் விதை நோ்த்தி செய்யலாம் அல்லது சூடோமோனாஸ் அல்லது டிரைக்கோடொ்மா விரிடி 1 கிலோவை 50 கிலோ தொழு உரத்தை 1 ஏக்கருக்கு விதைத்த 30-35 நாள்களில் நிலத்தில் தூவி நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றாா்.

காரைக்கால் முன்னாள் கூடுதல் வேளாண் இயக்குநா் ந.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். தொடா்ந்து, பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி உழவியல் துறை பேராசிரியா் ஆா்.மோகன், பயிா் பாதுகாப்பு பிரிவு தொழில்நுட்ப வல்லுநா் சு. திவ்யா ஆகியோா் பேசினா். பயிற்சியில் 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் வி.அரவிந்த் வரவேற்றாா். தொழில்நுட்ப வல்லுநா் (வேளாண் விரிவாக்கம்) ஆ. செந்தில் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.