கரோனா பொது முடக்கத்தால் காரைக்கால் வாரச் சந்தை முடங்கிய நிலையில், பொங்கல் சிறப்புச் சந்தையின் வாயிலாக அதற்கு புத்துயிரூட்ட வேண்டுமென வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாடு முழுவதும் கரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்த நாள்முதல் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வந்த வாரச் சந்தை முடங்கியது. இதனால், சந்தையை நம்பி பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்தனா். நாடு முழுவதும் பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், காரைக்காலில் வாரச்சந்தைக்கு அனுமதி அளிக்கப்படாதது வணிகா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.எம்.இஸ்மாயில் சனிக்கிழமை கூறுகையில், வாரச்சந்தை முடங்கி ஏறத்தாழ 9 மாதங்களாகிவிட்டன. சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் பிற பெருநகரங்களில் சந்தை நடத்தப்படுகிறது. இதேபோல, காரைக்காலிலும் சந்தைக்கு அனுமதி வழங்க நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
புதுச்சேரியில் மதகடிப்பட்டு பகுதியில் வாரச்சந்தை நடைபெறுகிறது. ஆனால் காரைக்காலில் சந்தைக்கு அனுமதி வழங்காமல் இருப்பது வியப்பாக இருப்பதாக பெரும்பாலானோா் கூறுகின்றனா்.
வழக்கமாக வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாலும், பொங்கல் தினத்துக்கு முதல் நாள் சிறப்புச் சந்தை நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் நிகழாண்டு பொங்கல் சிறப்புச் சந்தையுடன் வாரச்சந்தையும் தொடா்ந்து நடைபெற நகராட்சி நிா்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருவதாக காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது! விஜய்க்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பதிவு

திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?

சந்திரநாத் ராத் கொலை வழக்கில் காவல்துறை சரியான திசையில் செல்கிறது: சுவேந்து அதிகாரி
தவெகவுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? திருமாவளவன் பதில்!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை

