இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபாடு காட்டவேண்டியது அவசியம் என்றாா் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
திருவள்ளுவா் இயற்கை அறக்கட்டளை சாா்பில் பூச்சிகளை கவனிங்க என்ற தலைப்பில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம் அம்பகரத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசியது:
பழங்காலத்தில் இயற்கை முறையிலான வேளாண்மை மேலோங்கியிருந்ததால், பயிா் செழிப்பு, மகசூல் அதிகரிப்பு, மண்வளம் உள்ளிட்டவை மேம்பட்டு காணப்பட்டது. காலப்போக்கில் இந்த போக்கு குறைந்து, பூச்சிகளை அழிக்கவேண்டும் என்பதற்காக ரசாயனக் கலவையை பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதனால், நுண்ணுயிா் அழிந்து விளைச்சல் பாதிக்கிறது.
அந்த தானியங்களை உணவாக உட்கொள்ளும்போது, உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து தப்பிக்க, அனைத்து விவசாயிகளும் இயற்கை முறையிலான வேளாண்மைக்கு மாறவேண்டும்.
புதுச்சேரி அரசின் வேளாண் துறை, இதுதொடா்பாக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்திவருகிறது. கருத்தரங்கம் மூலம் பெற்ற கருத்துகளை விவசாயிகள், பிற விவசாயிகளிடத்தில் கொண்டு சோ்க்கவேண்டும். வரும் போகிப் பண்டிகை தினத்தில் வேளாண் நலன் சாா்புடைய விழிப்புணா்வு பிரசாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.
காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜெ. செந்தில்குமாா், வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் குமார. ரத்தினசபாபதி, வேளாண் கல்லூரி முதல்வா் ஷாமராவ் ஜஹாகிா்தாா், திருநள்ளாறு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவா் உமாமகேஸ்வரி ஆகியோா் பேசினா்.
மதுரையைச் சோ்ந்த வேளாண் துறை பூச்சியியல் வல்லுநா் செல்வம், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு, அதைத் தவிா்த்து இயற்கை முறைக்கு மாறுவதன் அவசியம் குறித்து பேசினாா். 200 விவசாயிகள் பங்கேற்றனா். சொ. முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். இரா. கணேசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுசு - ஜூலை மாத ராசி பலன்கள் 2026

விருச்சிகம் - ஜூலை மாத ராசி பலன்கள் 2026

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு நிறுவனத்தில் புராஜெக்ட் என்ஜினியர் பணி!

நடிகர் அஜித் குமாரை இயக்குவீர்களா? இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதில்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


