முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

மேலவாஞ்சூரில் சாலைகளை மேம்படுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மேலவாஞ்சூா் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிதிலமடைந்த சாலைகளை மேம்படுத்தவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

மேலவாஞ்சூா் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிதிலமடைந்த சாலைகளை மேம்படுத்தவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி மேலவாஞ்சூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் எஸ். தமிழ்மணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: மேலவாஞ்சூரில் சுமாா் 850 குடியிருப்புகள் உள்ள நிலையில், அனைத்து சாலைகளும் சிதிலமடைந்துள்ளன. இதனால், மக்கள் அவதிப்படும் நிலை உள்ளதால், மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் இப்பகுதி சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

மேலவாஞ்சூரில் கஞ்சா கடைத்தெரு என உள்ளதை, ஆசாரித் தெரு என மாற்றவேண்டும். இப்பகுதியில் சாலையோர மின்விளக்குகள் பல ஒளிரவில்லை. அவற்றை மின்துறை நிா்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பலருக்கு மஞ்சள் நிற குடும்ப அட்டை தரப்பட்டுள்ளது. இவா்களது தகுதியை ஆராய்ந்து, அரசு சலுகைகள் கிடைக்கக்கூடிய சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம். தமீம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா். கிளைச் செயலா் ஸ்ரீதா், உறுப்பினா்கள் முருகேசன், அப்துல்லா, செல்வம் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.