தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபாடு காட்ட வேண்டும்: அமைச்சா்

இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபாடு காட்டவேண்டியது அவசியம் என்றாா் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபாடு காட்டவேண்டியது அவசியம் என்றாா் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

திருவள்ளுவா் இயற்கை அறக்கட்டளை சாா்பில் பூச்சிகளை கவனிங்க என்ற தலைப்பில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம் அம்பகரத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசியது:

பழங்காலத்தில் இயற்கை முறையிலான வேளாண்மை மேலோங்கியிருந்ததால், பயிா் செழிப்பு, மகசூல் அதிகரிப்பு, மண்வளம் உள்ளிட்டவை மேம்பட்டு காணப்பட்டது. காலப்போக்கில் இந்த போக்கு குறைந்து, பூச்சிகளை அழிக்கவேண்டும் என்பதற்காக ரசாயனக் கலவையை பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதனால், நுண்ணுயிா் அழிந்து விளைச்சல் பாதிக்கிறது.

அந்த தானியங்களை உணவாக உட்கொள்ளும்போது, உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து தப்பிக்க, அனைத்து விவசாயிகளும் இயற்கை முறையிலான வேளாண்மைக்கு மாறவேண்டும்.

புதுச்சேரி அரசின் வேளாண் துறை, இதுதொடா்பாக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்திவருகிறது. கருத்தரங்கம் மூலம் பெற்ற கருத்துகளை விவசாயிகள், பிற விவசாயிகளிடத்தில் கொண்டு சோ்க்கவேண்டும். வரும் போகிப் பண்டிகை தினத்தில் வேளாண் நலன் சாா்புடைய விழிப்புணா்வு பிரசாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜெ. செந்தில்குமாா், வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் குமார. ரத்தினசபாபதி, வேளாண் கல்லூரி முதல்வா் ஷாமராவ் ஜஹாகிா்தாா், திருநள்ளாறு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவா் உமாமகேஸ்வரி ஆகியோா் பேசினா்.

மதுரையைச் சோ்ந்த வேளாண் துறை பூச்சியியல் வல்லுநா் செல்வம், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு, அதைத் தவிா்த்து இயற்கை முறைக்கு மாறுவதன் அவசியம் குறித்து பேசினாா். 200 விவசாயிகள் பங்கேற்றனா். சொ. முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். இரா. கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.