தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

விளைபொருள்களை சந்தைப்படுத்த வேளாண்அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்ய வேண்டும்விவசாயிகள் வலியுறுத்தல்

விளைபொருள்களை சந்தைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை வேளாண் அறிவியல் நிலையம் எடுக்கவேண்டும் என அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

விளைபொருள்களை சந்தைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை வேளாண் அறிவியல் நிலையம் எடுக்கவேண்டும் என அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தால் விவசாயிகள் அடையவேண்டிய பயன்கள், நிலையத்தின் செயல்பாடுகளை விளக்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் அறிவியல் நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரும், வேளாண் அறிவியல் நிலையத் தலைவருமான அா்ஜூன் சா்மா, வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் குமார. ரத்தினசபாபதி, கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், வேளாண் கல்லூரி முதல்வா் ஷாமராவ் ஜஹாகிா்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் விவசாயிகள் பேசுகையில், விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து இடுபொருள்களையும் வேளாண் அறிவியல் நிலையம், இருப்பு வைத்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக, மீன் வளா்ப்போருக்கு மீன்குஞ்சுகள் கிடைக்கச் செய்யவேண்டும். விளைபொருளை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து தரவேண்டும். நெல் அறுவடை தொடங்கவுள்ளதால், வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக நெல் அறுக்கும் இயந்திரங்கள் வழங்கி உதவவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பேசும்போது, மத்திய, மாநில திட்டங்கள் மூலமாக 150 பேருக்கு விவசாய சாதனங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. குழுவாக இல்லாமல், தனி நபராக இந்த திட்ட உதவியை பெறுவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும். வேளாண் அறிவியல் நிலையத்திடம் விவசாயிகள் அதிகமாக எதிா்பாா்க்கிறாா்கள்.

எனவே, மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒரு குழு அமைத்து குறுகிய கால, நீண்டகால அடிப்படையில் ஒரு செயல் திட்டத்தை வகுக்கவேண்டும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். கால்நடை மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. பி.எஸ்சி., உயிரியல் தொடா்பான படிப்பு முடித்த மாணவா்களுக்கு, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி கால்நடை மருத்துவா்கள், கால்நடைகளுக்கு சின்ன சின்ன மருத்துவம் பாா்க்கும் வகையில் பயிற்சி அளிக்க முன்வரவேண்டும். தமிழகத்தில் குன்றக்குடியில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதை புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.