அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

மாநில தகவல் ஆணையர் கரூரில் ஆய்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 12:50 pm IST

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில தகவல் ஆணையர் பி. தமிழ்ச்செல்வன் கூட்டத்தில் பங்கேற்று பேசியது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதிலளிக்காமல் இருக்கக் கூடாது. அதேபோல அளிக்கப்படும் தகவல்கள் முழுமையாகவும், விவரமாகவும் அளிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் பதிலளிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பதிலளிக்கும் அலுவலர்கள் யார், யார் போன்ற விவரங்கள் குறித்து தகவல் ஆணையர் பயிற்சி அளித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, கோட்டாட்சியர் நெல்லைவேந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.