/
திருக்குறள் படித்தால் மனதில்
தெளிவு பிறந்திடும் குணத்தில்
கற்பதைத் தெளிவுற கற்கணும்
கற்றதன்படி நாம நிற்கணும்!
-
தினம் ஒரு திருக்குறள் படித்திடு
திருத்தமாய் உச்சரிப்பு ஒலித்திடு
பொருளைத் தெளிவாய் ஏற்றிடு
பொலிவான முகத்தைப் பெற்றிடு!
-
அறியலாம் ஆயிரம் சிந்தனை
அலசியே தெளியலாம் அத்தனை
தெளிவான அறிவு வந்திடும்
திருக்குறள் பொலிவைத் தடுக்கும்!
-
உலகம் நமதென உணர்த்திடும்
உயர்ந்த நன்னெறி உயர்த்திடும்
ஒற்றுமை உணர்வு செலுத்திடும்
ஒழுக்கம் நெஞ்சில் புகுத்திடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








