இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்க ஆயத்த மாநாடு

தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த மாநாடு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மார்ச் 2013, 12:36 pm IST

தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த மாநாடு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி 3 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி, பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணி தயாரிப்பிற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்க ஆயத்த மாநாடு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தீர்த்தகிரி கவுண்டர், செயலர் முனியப்பன், பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார்.

கூட்டத்திற்கு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க, அகில இந்தியத் தலைவர் கணேசன் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சண்முகம், கோதண்டபாணி, மூர்த்தி, ராமர், முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.