வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஓய்வூதியர்களின் குறைகளை விரைந்து தீர்க்க அறிவுறுத்தல்

ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ்

Updated On :11 மே 2013, 12:37 pm IST

ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குடும்ப நல நிதி உள்ளிட்ட 65 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பேசியது:

ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு மட்டுமே உள்ளது.

அரசுப் பணியில் 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஒய்வுபெற்ற அவர்களது குறைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விரைவில் அனைத்து மனுக்களுக்கும் ஒப்பளிப்பு பெற்று காசோலை கிடைக்கவும்,  ஓய்வூதியதாரர்களை நல்லமுறையில் வரவேற்று அவர்களது குறைகளை இன்முகத்துடன் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம், ஓய்வூதிய நலத் துறை இணை இயக்குநர் பி.தேவராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முகம்மது பருக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.