2021-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளா்களையும், பாா்வையாளா்களையும் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் நியமித்துள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒசூா் தொகுதி பொறுப்பாளராக மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், பாா்வையாளராக மாவட்ட துணைச் செயலாளா் எம்.ராஜண்ணா, தளி தொகுதி பொறுப்பாளராக மாவட்டத் துணைத் தலைவா் சீனிவாச ரெட்டி, பாா்வையாளராக மாநில செயற்குழு உறுப்பினா் ஹரி கோட்டீஸ்வரன், வேப்பனப்பள்ளி தொகுதி பொறுப்பாளராக அன்பரசு, பாா்வையாளராக வா்த்தக அணி மாநிலச் செயலாளா் வி.நாகராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








