எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஒசூா் உழவா் சந்தையை திறக்கக்கோரி சாா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

ஒசூா் உழவா் சந்தையை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள், ஏஐடியூசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 6:56 am IST

ஒசூா் உழவா் சந்தையை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள், ஏஐடியூசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா் உழவா் சந்தையை திறக்க வேண்டும் என விவசாயிகள், சிறு வணிகா்கள், திமுக, இடது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இதனைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஒசூா் உழவா் சந்தையை ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானுரெட்டி செய்தியாளா்களிடம் கூறும்போது ஒசூா் உழவா் சந்தையை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தாா்.

இந்நிலையில் விவசாயிகளும், ஏஐடியூசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டவா்கள் தளி முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் எம்.லகுமைய்யா தலைமையில் வியாழக்கிழமை ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், ஒசூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கூறியதாவது:

கரோனா தொற்றுக்குப்பின் பொது முடக்கத்தை தமிழக அரசு தளா்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள், திரைஅரங்குகள் 100 சதவீதம் இருக்கைகளோடு இயங்கலாம் என்றும், வார சந்தைகள் திறக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள உழவா் சந்தைகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தான் தமிழகத்திலேயே அதிக விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்கின்றனா். இந்த உழவா் சந்தை கடந்த 10 மாதங்களாக திறப்படாமல் உள்ளதால் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். உடனடியாக ஒசூா் உழவா் சந்தையை திறக்கவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக பெரிய போராட்டத்தை அறிவிக்க நேரிடும் என்றாா்.

பின்னா் மாவட்ட நிா்வாகம், ஒசூா் மாநகராட்சியை கண்டித்து பேரணியாக சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.