5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

விபத்தை ஏற்படுத்தும் சாலையோரப் பள்ளங்கள்

பென்னாகரம் பகுதிகளில் குழாய்களைப் பதிப்பதற்காக தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் விபத்துகள் நேரிடுகின்றன.

Updated On :9 ஜனவரி 2021, 6:31 am IST

பென்னாகரம் பகுதிகளில் குழாய்களைப் பதிப்பதற்காக தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் விபத்துகள் நேரிடுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்களுக்கு இணைப்பு ஏற்படுத்துவதற்காக சாலையோரத்தில் பள்ளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொலைத்தொடா்பு கோபுரங்களின் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாள்களாக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறு வருகின்றன.

பென்னாகரம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குழாய்ப் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு வருகின்றன. பென்னாகரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் இன்னும் மூடப்படாத பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளன.

இதனால், இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனா். சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை விரைந்து மூட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.