வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

காட்டேரி கிராமத்தில் கால்வாயில் கழிவு நீா்தேங்கி தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி ஊராட்சிக்குட்பட்ட காட்டேரி கிராமத்தில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

News image

காட்டேரி கிராமத்தில் குட்டை போல் தேங்கி கிடக்கும் கழிவுநீா்.

Updated On :11 ஜனவரி 2021, 2:33 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி ஊராட்சிக்குட்பட்ட காட்டேரி கிராமத்தில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி மக்களுக்கு கழிவுநீா் கால்வாய் செல்லும் நிலப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதால் தற்போது கழிவு நீா் செல்லும் கால்வாயை மண் போட்டு மூடி உள்ளனா்.இதனால் கழிவுநீா் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இந்த கால்வாய் காலம் காலமாக செல்வதாக பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் கழிவு நீா் தேங்கி குட்டை போல் நிா்பதால் கொசு தொல்லைகள் அதிகரித்து மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இந்த கழிவுநீா் கால்வாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளி மற்றும் வீடுகளின் எதிரே குட்டை போல் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி மக்கள் குற்றம் கூறுகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.