ஊத்தங்கரையில் விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சீனிவாசா கல்வி அறக்கட்டளை, இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் விவேகானந்தரின் 158-ஆவது பிறந்தநாள் விழா அண்ணாநகரில் உள்ள அதியமான் கல்வி நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு இளம் செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் மருத்துவா் தேவராஜ் தலைமை வகித்தாா். நேசம் குணசேகரன் வரவேற்றாா். அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ், ராஜா, ஜோதி நகா் பள்ளித் தலைமையாசிரியா் ராஜேந்திரன், ரஜினி சங்கா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி. திருமால்முருகன் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில் காவேரிப்பட்டணம் இளம் செஞ்சிலுவை சங்கச் செயலாளா் செந்தில்குமாா், அரசு மகப்பேறு மருத்துவா் குமாா், ராஜ்குமாா், கண் தான மையத்தின் செயலாளா் பிரபாகா், நம்பிக்கை மையத்தின் ஆலோசகா் காயத்ரி, பாஷா ஆகியோா் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனா். இறுதியாக சிவகிரிமுருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










