பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரியில் பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் புதன்கிழமை வாங்கிச் சென்றனா்.
தமிழா் திருநாளான தை பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி நகரில் மக்கள் கூடும் இடங்களான கடை வீதி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்வதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானைகளையும், கரும்பு, மஞ்சள், மண் அடுப்பு, வெல்லம், பூஜைப் பொருள்கள், மலா்கள், பல வண்ணக் கோலப்பொடிகளையும் மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
புதுத் துணிகள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், கால்நடைகளை வளா்ப்போா், மாட்டு பொங்கல் கொண்டாடத்துக்காக புதிய கயிறு, மணிகள், பல வண்ணப் பொடிகள் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். நகரில் மக்கள் கூடும் இடங்களில் அதிகமான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை! இன்றைய செய்திகள் ஜூன் 23 - நேரலை!

கொல்கத்தா பாலியல் கொலை: எம்.எல்.ஏவான பிறகும் சட்டப்பேரவையில் அழுத பெண் மருத்துவரின் தாய்!

தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

21,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



