குருபரப்பள்ளி அருகே உள்ள ஏரியிலிருந்து மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையில் போலீஸாா், கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். வசந்தப்பள்ளி ஏரி அருகே சென்றபோது ஒரு கும்பல், ஏரியிலிருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பதைக் கண்டனா்.
போலீஸாரைக் கண்ட அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியது. விசாரணையில், அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









